search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி கைது"

    • கண்ணம்மா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • விற்பனைக்காக வைத்திருந்த 8 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பசுவனபுரம் கரலியம் ரோடு அருகே மது விற்பனை நடைபெறுவதாக கடம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற சிறப்புப் இன்ஸ்பெக்டர் சாதிக் பாஷா மற்றும் போலீசார் அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி கண்ணம்மா (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 8 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே கள் விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.
    • அங்கு சோதனையிட்டதில் 30 லிட்டர் கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பி.பி.நத்தம் பகுதியில் கள் விற்பனை நடைபெறுவதாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அந்தப்பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு பதநீர் விற்றுக்கொண்டிருந்த ஒரு மூதாட்டியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அங்கு சோதனையிட்டதில் 30 லிட்டர் கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், அவர் பேரையூர் அருகே உள்ள மேலப்பட்டியை சேர்ந்த ராஜகுருவின் மனைவி ராஜலட்சுமி(வயது60) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். 

    • 10 பாக்கெட்டுகள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள ரகிமான்பேட்டையை சேர்ந்த 85 வயது மூதாட்டி தனது வீட்டின் பின்புறம் சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி 10 பிளாஸ்டிக் பையில் வைத்திருந்த சாராயத்தை பறிமுதல் செய்து அங்கேயே அழித்தனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே சாராய விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.
    • சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில்சென்று சோதனை செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே குள்ளஞ்சாவடி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த நாகம்மாள் (வயது60 ) சாராயம் விற்பனை செய்துவருவதாக தொடர்ந்து புகார் வந்தது.அதன்பேரில் குள்ளஞ்சாவடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். அப்போது நாகம்மாள் விற்பனைக்கு வைத்து இருந்த சாராயம் கைப்பற்றப்பட்டு அவர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    ×